districts

மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு

புதுச்சேரி, ஆக. 26- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாண வர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா உறுதி யளித்துள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவிகள் விடுதி களில் அடிப்படை கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, காவல்துறை கண்காணிப்பாளர் முருகையன் உத்தரவின் பேரில், மாண வர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இச்சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ‘இந்தியா கூட்டணி’கட்சிகளின் மாணவர்,இளைஞர்கள் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, புதுச்சேரி சட்டம்  ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பா ளர் நாரா சைதன்யா, பேச்சு நடத்தினார். அப்போது, மாணவர்களுக்கு உரிய பாது காப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  இச்சந்திப்பின் போது  இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பிரவீன்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த், மாநிலத் தலைவர் கவுசிகன், செயலாளர் சஞ்சை சேகரன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் முரளி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன், விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் தமிழ்வாணன், விடுதலை சிறுத்தைகள் இளைஞர் அமைப்பின் மாநில செயலாளர் இளங்கோவன், ஆகி யோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.