districts

img

நலவாரிய உறுப்பினர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குக

கிருஷ்ணகிரி,பிப்.13- நல வாரியத்தில் உள்ள தையல் தொழி லாளர்களின் பிரச்சனையை தீர்க்க முத்தரப்பு குழு அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி  தையல் கலைஞர்கள் சங்க அமைப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது. ஓசூரில் சிஐடியு நிர்வாகி தேவி தலை மையில் நடைபெற்ற பேரவையில் தையல் கலைஞர்கள் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளர் கண்மணி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் துவக்க உரையாற்றி னார். தையல் கலைஞர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் ஐடா ஹெலன் சிறப்புரையாற்றினார். அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தம்மாள், மாதர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சிஐடியு மாவட்ட தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி,  நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். ஓய்வு பெற்ற தையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ3000 ஆக உயர்த்தவேண்டும்,கடன் உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள்:  தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவராக தேவி, செயலாளராக பூர்ணிமா, பொருளாளராக மீனாட்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.