நூறுநாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷணமூர்த்தி, மாவட்டத் தலைவர் பி.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நூறு நாள் வேலை வழங்க உறுதியளித்தனர், இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.