districts

img

ஒரத்துார் மக்கள் காலிகூடங்களுடன் விக்கிரவாண்டியில் போராட்டம்

விழுப்புரம், நவ.1- விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி ஒன்றியம், ஒரத்துார் கிராம குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கிராம மக்கள் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி ஒன்றியம், ஒரத்துார், நந்தமேடு ஆதி திராவிடர் பகுதியில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரி வித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, இதை கண்டித்தும், உடனடியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி யும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் காபிரியேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சிபிஎம் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ண ராஜ், மகளிர் குழு சித்ரா, ஒன்றிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.கலியமூர்த்தி, அமுதா, சேகர் உட்பட  பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன் ஆகியோர்  பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று அனைவரும் போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர்.