districts

img

12 தொழிலாளர்கள் பணி நீக்கம்: தொழிற்சாலை முன்பு 6 நாளாக போராட்டம்

திருவள்ளூர், பிப்.18- மாண்டன் ஹைட்ராலிக் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 தொழி லாளர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி 6 வது நாளாக தொழிற் சாலை நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாண்டன் ஹைட்ராலிக் தனியார் நிறுவனம் ஜெர்மன் மற்றும் இந்தியா இணைந்து 1997ல் இருந்து 2007 வரை அம்பத்தூர் தொழிற்பேட்டையில்  சிறிய நிறுவனமாக குறைந்த அளவு தொழிலாளர்களை கொண்டு இயங்கி வந்தது. தொழிலாளர்களின் கடுமை யான உழைப்பிற்கு பிறகு 2008 டிசம்பர் முதல் திரு வள்ளூர் மாவட்டம், சோழ வரத்தில் விரிவாக்கம் செய்து  பெரிய தொழில் நிறுவனமாக விரி வடைந்தது. இதில் 52 நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரு கின்றனர். இதில் தயாரிக்கப்படும் ஹைட்ராலிக் பெரிய அணைக்கட்டுகளின் லாக் ஓபன் செய்யும் உபகரணம் , இந்தியன் எரிவாயு கழகம், ஆயில் நிறுவனங்கள் பயன்படுத்தும்,  32 வகை யான ஹைட்ராலிக் இயந்திரம் இங்கு தயாரிக்கப்படுகிறது. இது இந்தியா மட்டுமின்றி எத்தோப்பியா, நைஜீரியா, தாய்லாந்து, நேபாளம், துபாய், அமெரிக்கா, வியட் நாம் உள்ளிட்ட பல்வேறு நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.மேலும் இந்த நிர்வாகம் நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 2011ல் சிஐடியு  தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

அது முதல் 2023 வரை இந்த நிறுவனத்திற்கும், தொழிற்சங்கத்திற்கு எந்த வித கருத்து வேறுபாடு மின்றி சுமூகமான முறை யில் ஒப்பந்தங்கள் மற்றும் போனஸ் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வந்தது.  இந்த சூழலில் 2023 மார்ச் முதல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது. இதிலிருந்து முறையாக ஒத்துழைப்பு இல்லாத நிலையில் சங்கத்திற்கும்,  நிறுவனத்திற்கும் பிரச்சனை கள் உருவாக ஆரம்பித்தது. பிறகு 2023 நவம்பர் முதல்  பணி செய்யும் நேரம் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதில் நிர்வாக ஊழி யர்கள் 12 பேர்,  கடந்த பிப் 14 அன்று அதிரடியாக,  சட்ட விரோதமாகவும் வெளி யேற்றப்பட்டனர். மேலும் நிரந்தர தொழிலாளர்கள்  வேலை செய்யும் நேரம் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு பற்றி சட்ட விரோதமாக பேசு வது, மிரட்டுவது என நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளது. இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 பேரையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐ டியு சார்பில்  பிப் 14 முதல் தொழிற்சாலை முன்பு அனைத்து தொழி லாளர்களும் அமர்ந்து  இரவும், பகலுமாக போராடி வருகின்றனர். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.நடராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட நிர்வாகி கே.அர்ஜுனன், கிளை நிர்வாகிகள் ராமச்சந்திரன், அறிவழகன், உதயசங்கர், ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.