districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் கேட்டு போராட்டம்

சென்னை, டிச. 19 - குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க கோரி வியாழனன்று (டிச.19) சென்னை ராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதி (பிஎப்) அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு அனைத்து இபிஎப் ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு இந்த போராட்டத்தை நடத்தியது. இஎஸ்ஐ திட்டத்தில் இபிஎப் ஓய்வூதி யர்களையும் இணைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகை கட்ட ணத்தை மீண்டும் செயல்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உயர் ஓய்வூதியம் வழங்க காலதாமதம் செய்யக் கூடாது, ஓய்வூதி யர்களை இபிஎப்ஓ நிர்வாகம் கண்ணிய மாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூ தியர்கள் முழக்கமிட்டனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் அமைப்புச் செயலாளர் கே.பி.பாபு, கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏ.கே.சந்தானகிருஷ்ணன், கே.வேணுகோபால், பி.சுரேஷ், கே.ராமையன், எம்.நந்தகோபால் உள்ளிட்டோர் கோரிக்கைளை விளக்கி பேசினர். தொமுச பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், எம்எல்எப் தலைவர் ஆவடி அந்திரிதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.