districts

img

பாஜக- பாரத ஸ்டேட் வங்கி கள்ளக் கூட்டணியை கண்டித்து போராட்டம்

திருவள்ளூர், மார்ச் 12- தேர்தல் பத்திர ஊழலில் ஈடுபட்ட மோடி  பாஜக அரசை கண்டித்தும், ஊழல் பட்டியலை வெளியிட மறுக்கும் எஸ்பிஐ வங்கியை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (மார்ச் 12), திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கி கிளைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர்  கட்சியின் வட்டக் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், இ.மோ கனா, மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.கீதா, என்.கங்காதரன், ெஜ.ராபர்ட்எபிநேசர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சோழவரம் சோழவரத்தை அடுத்த மொண்டியம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன் தலைமை தாங்கினார்.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன், ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லையன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சித்ரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அ.து.கோதண்டன், இ.ரவி, டி.சரளா ஆகியோர் கலந்து கொண்டனர். மதுராந்தகம் மதுராந்தகம் வட்ட குழுவின் சார்பில் மதுராந்தகம் ஸ்டேட் வங்கி அருகில் வட்டக் குழு உறுப்பினர் நடராஜ் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மூத்த தலைவர் டி.கிருஷ்ணராஜ், வட்ட செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் எம்.எஸ்.அர்ஜூன் குமார் உள்ளிட்ட பலர் பேசினர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து கட்சியின் பேசினார். முன்னதாக காந்தி சிலை அருகிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.