சென்னை,ஆக,3
புரோஸ்டேட் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 63 வயது நபருக்கு சென்னை ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை யில் ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு ஒரே வாரத் தில் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சை மு றை சிறுநீரகவியல் மற்றும் புற்றுநோயியல் துறைகளில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள விழுப்புர மாவட்டத்தை சேர்ந்த 63 வயதான நப ருக்கு சிறுநீர் ஓட்டம் அதி கரித்து இருந்தது. புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதை அளவிடும் மற்றும் உறுதிப்படுத்தும் இரத்தப் பரிசோதனையில் இவருக்கு புரோஸ்டேட் நோய் இருப்பது கண்ட றியப்பட்டது.
அதன் பின் அந்த முதியவர் ஏஐஎன்யூ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டவுடன், நோயறி தலை உறுதிப்படுத்த ஒரு பயாப்ஸி செய்யப்பட்டு, மருத்துவமனையின் நிபுணர் குழுவால் ரோபோடிக்- உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த கட்டி அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரத்திற்குள், எந்த பிரச்சனையும், புற்றுநோய் அறிகுறிகளும் இல்லாமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை ஏஐஎன்யூ மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் குமார் தெரி வித்துள்ளார்.