செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் கொள்ளவை உயர்த்த திட்டம்
சென்னை, அக். 9- தமிழ்நாடு சட்டப்பேரவை திங்களன்று (அக்.9) நடைபெற்ற கேள்வி நேரத்தில், பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, “செம்பரம்பாக்கம் ஏரியில் கொள்ளளவை ஓராண்டுக்குள் 540 எம்எல்டி உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு நீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும். செம்பரம்பாக்கத்தில் தற்போது 240 எம்எல்டி தண்ணீர் உள்ளது. ஏழாண்டு காலம் அதை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையிடம் அனுமதி பெறப்பட்டு தற்போது குழாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மாநகராட்சி ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
சென்னை,அக்.9- பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரி யும் அலுவலர்கள், பணி யாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2023-24ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி களை திங்களனறு (அக். 9) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரு பூங்கா விளை யாட்டுத் திடலில் தொடங்கி வைத்தார். அக்,9 முதல் 27வரை நடைபெறும் வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் , டென்னிகாய்ட், எறிப்பந்து , கோகோ, கபடி, இறகுப் பந்து, நீச்சல் போட்டி, சதுரங்க ஆட்டம், கேரம், தடகள விளையாட்டுக்கள், கயிறு இழுத்தல், மியூ சிக்கல் சேர்ஸ், லக்கி கார்னர் உள்ளிட்ட விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா எழும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அடைக்க புதிய இடம்
சென்னை,அக்.9- தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர். தற்போது சுற்றி உள்ள பல இடங்களில் இருந்து அதிக அளவு மாடுகள் கொண்டு வரப்படுவதால் இப்பகுதியில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரும் சில நாட்களில் மாடம்பாக்கம் பகுதியில் மாடுகளை கட்டி வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்லாவரம், பம்மல் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை திருநீர்மலைப் பகுதியில் அடைத்து வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமானத்தில் கோளாறு
சென்னை,அக்.9- சென்னை விமான நிலையத்தில் இருந்து, துபாய் செல்லும் பயணிகள் விமானம் ஞாயிறன்று இரவு 7 மணிக்கு, புறப்பட தயாராக இருந்தது. அதில் 172 பயணிகள் செல்ல தயாராக இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானி, விமானத்தின் எந்திரங்களை சரிபார்த்தபோது கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிந்தது இதைத்தொடர்ந்து எந்திர கோளாறை சரிபார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் விமானம் இரவு புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. புறப்படும் நேரம் இரவு 8 மணி, 9 மணி என மாறிமாறி அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இரவு 10.30 மணிக்கு விமானத்தின் எந்திரங்கள் சரி செய்யப்பட்டு சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக துபாய்க்கு புறப்பட்டு சென்றது.
தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, அக். 9- தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நாகர்கோவில் திரு நெல்வேலி வழித்தடத்தில் 4 ரயில்களும், கோவைக்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதிகமானோர் சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு பெரும்பாலானோர் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி ரயில்வே முன்பதிவு தொடங்கப் பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்து களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. தனியார் பேருந்துகள் விடு முறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது தொடர் கதையாகி வருகிறது. தனியார் பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ1,500 முதல் 6 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில் 4 ரயில்களும், கோவைக்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. மேலும் கூடுதலாக பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்றும், தனியார் பேருந்துகளில் வசூ லிக்கப்படும் கட்டணத்தை குறைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம் விலை குறைந்தது
சென்னை,அக்.9- தங்கம் விலை திங்களன்று ( அக்,9) சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,365-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,853-க்கும், ஒரு சவரன் ரூ.46,824-க்கும் விற்பனையானது.
மிருகண்ட நதி அணையை புனரமைக்க முடிவு: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்
சென்னை, அக்.9- தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (அக்.9) கேள்வி நேரத்தின்போது கலசப்பாக்கம் ஒன்றி யம், மிருகண்ட நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா? என்றும் 10 ஆண்டுகளாக பரா மரிப்பின்றி சிதிலமடைந்துள்ள நிலை யில் இந்த ஆண்டு அந்த பணிகள் தொடங்கப்படுமா எனவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் தி.பெ.சு. சரவணன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், “மிருகண்ட நதி சீர மைக்க உலக வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கை மத்திய நீர்வளத் துறையின் ஒப்புத லுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வ றிக்கையை கொடுத்துள்ளோம். அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” எனவும் கூறினார். நந்தன் கால்வாய் திட்டம் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான நந்தன் கால்வாய் மற்றும் தென்பெண்ணை இணைப்புத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்? என்று கு. பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், நந்தன் கால்வாய் திட்டம் என்பது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஏற்கெனவே ஒதுக்கிய நிதி போதவில்லை. எனவே, ரூ.309 கோடிக்கு திருத்திய மதிப்பீடு தயார் செய்துள்ளோம். நிதி உதவி கிடைத்ததும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சாத்தனூர் அணை புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பட்டாசு கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு
சிபிஐ விசாரணைக்கு விட்டது கர்நாடகம்
கிருஷ்ணகிரி,அக்.9- அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வரும் நிலையில் இந்த பட்டாசு கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பட்டாசு கடைக்கான இடத்திற்கு அனுமதி ஓர் இடத்திலும், சேகரித்து வைக்கும் குடோனுக்கு ஓரிடத்திலும் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கான கட்டிடத்தின் வரைப்படம் குறித்த அனுமதியும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதும். ஒரே இடத்தில் குறிப்பிட்ட வரையறையில் இல்லாமல் கடையும் குடோனும் செயல்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையற்ற அனுமதி அளித்ததுடன், கண்காணிக்காமல் இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவித்துள்ளதுடன் விசாரணையை சிபிஐயிடம் கர்நாடக மாநில அரசு ஒப்படைத்துள்ளது.இந்நிலையில் கடை உரிமையாளர்கள் பேடரப்பள்ளியை சேர்ந்த ராமசாமி ரெட்டி, நவீன் ரெட்டி, ரமேஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படாத குறித்தும் இந்நிலையை ஆய்வு செய்யாதது குறித்தும் மாநில அரசு அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.