districts

img

வீராணம் ஏரி தண்ணீரை சென்னைக்கு அனுப்புவதில் சிக்கல்

காட்டுமன்னார்கோவில், பிப். 19 - வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவ தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி வாயி லாக 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறு கிறது. சென்னை நகர மக்க ளுக்கு தாகத்தைத் தீர்ப்பதிலும் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை, பருவ காலங்க ளில் பெய்யும் மழையால் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை கை கொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை நடந்து முடிந்து ள்ளது. தற்போது உளுந்து சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதன்காரணமாக வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஏரியின் கொள்ளளவு 47.50 அடியிலிருந்து 43.95 அடியாக குறைந்துள்ளது. இந்த அளவு பிப்.18 அன்று 44.10 அடியாக இருந்தது. சென்னை மாநகர மக்க ளின் குடிநீர் தேவைக்காக பிப்.19 அன்று 63 கனஅடி நீர் அனுப்பப்பட்டது. வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், நீர்மட்டம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் நீர் மட்டம் இருக்கும் வரை மட்டுமே சென்னை க்கு தண்ணீர் அனுப்ப முடியும். அதற்கு கீழ் நீர்மட்டம் சென்று விட்டால் குடிநீர் அனுப்ப முடி யாது. எனவே, கோடை மழை பெய்தால்தான் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்ப இயலும் என்றனர்.