districts

img

வாலாஜா நகராட்சியில் சுங்கவரி வசூல்

ராணிப்பேட்டை, ஆக.28 -  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். தற்போது 25 குடும்பங்கள் இந்த தொழிலை தொடர்ந்து வருகின்றனர். மண்பாண்டம், விநாயகர் சிலைகளை செய்து அதில் கிடைக்கும் மிக குறைந்த வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வரு கின்றனர்.   தமிழ்நாட்டின் முதல் நகராட்சி வாலாஜா நகராட்சி யில் திருவிழாபோன்ற முக்கிய விற்பனை நாட்க ளில் நகராட்சி ஊழியர்கள் சிலர் தெருவோர வியா பாரிகளிடம் அதிக அளவில் தெருவோர சுங்கவரி வசூலிப்பது மண்பாண்ட தொழிலாளர்களை வேதனை படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர் கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வாலாஜா தாலுகா குழு உறுப்பினர் பி.சேகர் தலை மையில் புதன்கிழமை (ஆக. 28) வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லையை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சிலை விற்பனை செய்கிறோம். ஆனால், சிலர் இடையூறு செய்து தொழிலுக்கு தடை யாக உள்ளனர் என்றும் மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்ய தடை யில்லா சான்று வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினர். மனுவை பெற்றுக் கொண்ட நகர மன்றத் தலைவர் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். வாலாஜா தாலுகா செய லாளர் ஆர். மணிகண்டன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி, ஹரி, கார்த்திக், வி.செந்தில் குமார், விவ சாயிகள் சங்கத் தலைவர் நிலவு குப்புசாமி, வாலிபர் சங்க தலைவர் எஸ். செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.