புதுச்சேரி, ஜன. 17- தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட் டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஞாயிறன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித் துள்ளது. மேலும் வரும் 19ஆம் தேதி தொடங்க இருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெ.கோ.சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற விருந்த திருப்புதல் தேர்வு - 1 தமிழக அரசைப் பின்பற்றி ஒத்திவைக்கப்படுகிறது. தேர்தல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.