அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க, பாண்டிச்சேரி கோட்டத்தின் சார்பாக திண்டிவனம் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் ஜி.பாண்டியன், ஏஐஜிடிஎஸ்யு யின் தலைவர் பி.பூபாலன் ஆகியோரின் இணைந்து தலைமை தாங்கினர். அகில இந்திய உதவி பொது செயலாளர் இ.சேகர், மாநில உதவி செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் எஸ்.வேலு, ஏ.எஸ்.லூர்துசாமி, ஏ. கலைச்செல்வன், முருகன் , ஏழமலை மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.