சிதம்பரம், பிப். 20- சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் மக்கள் இயல் துறை மற்றும் இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்கம் இணைந்து ‘தென்னிந்திய மக்கள் தொகை வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தென் மண்டல மாநாடு நடை பெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் மாநாட்டு மலரை வெளியிட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்கு நர் சஜ்ஜன்சிங் சவான், மக்களியல் துறைத்தலைவர் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், இந்திய மக்களியல் துறை கூட்ட மைப்பு தலைவர் சுரேஷ்சர்மா, கூட்ட மைப்பின் தெற்குப் பிரிவின் ஒருங்கி ணைப்பாளர் அனில்சந்திரன், பொது செயலாளரான உஷாராம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநாட்டில் பல்வேறு மக்கள் தொகை தலைப்புகளை உள்ளடக்கிய 54 ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் 26 சுவரொட்டி விளக்கக்காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.