districts

img

நீர் ஊற்று குட்டைகளை அமைக்க வேண்டும் பொன்னேரி பகுதி மாநாடு வலியுறுத்தல்

திருவள்ளூர், அக். 21- பொன்னேரியை சுற்றி யுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் உப்பு அதிகம் உள்ளதால், ஆங்காங்கே நீர் ஊற்று குட்டைகளை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதி  24வது மாநாடு வலியுறுத்தி யுள்ளது. ஞாயிறன்று (அக் 20), தோழர் பூர்ணசந்திரன் நினைவரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் மூத்த உறுப்பினர் ஆர்.பக்தவச்சலம் கொடி ஏற்றி  வைத்தார். மாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.காளமேகம் தலைமை தாங்கினார். பகுதி குழு உறுப்பினர் எஸ்.ராதிகா வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் இ.தவமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் துவக்கவு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன் வாழ்த்தி பேசினார். பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் வேலை அறிக்கையை சமர்பித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் மாநாட்டை நிறைவுசெய்து பேசினர். கிளை செயலாளர் எல்.கோபி நன்றி கூறினார். தீர்மானங்கள் பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைத்து, சாலைகளை செப்பனிட வேண்டும், சிறுவாக்கம், அக்கரம்பேடு, மூரிச்சாம்பேடு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு அதிகம் உள்ளதால் நீர் ஊற்று குட்டைகளை அமைக்க வேண்டும், கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் முகத்து வார பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,  இலவம்பேட்டில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள வரவு கால்வாய்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிக்குழு தேர்வு 10 பேர் கொண்ட பொன்னேரி பகுதி குழுவின்  செயலாளராக எஸ்.இ.சேகர் தேர்வு செய்யப்பட்டனர்.