வேலூர், ஜன. 13 - வேலூர் நறுவீ மருத்துவமனையில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறு வனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில், துணைத் தலைவர் அனிதா சம்பத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கும்மியடித்தல், உரி அடித்தல், சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி, கரும்பு கடிக்கும் உள்ளிட்ட போட்டிகள் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்களுக்கிடையே நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மற்றும் பொங்கல் விழாவை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொது மேலாளர் நிதின் சம்பத், அபிராமி சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.