districts

img

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடு

சென்னை, டிச. 29 - புத்தாண்டையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அருண் தலைமையில் சனிக்கிழமையன்று(டிச.28) ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில், டிச.31 ஆம் தேதி இரவு 9 மணியில் இருந்து காவால்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 18 ஆயிரம் காவலர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு,18ஆயிரம் காவ லர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர்.  31  ஆம் தேதி மாலை முதல் 1 ஆம் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரை ஓரங்க ளில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யவும், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாது காப்பை பலப்படுத்தவும், மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும், முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் குற்றத்  தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. கடற்கரையையொட்டிய பகுதி களில் கடலோர பாதுகாப்பு குழு மம், மெரினா கடற்கரை உயிர்  காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை யும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அரு கில் ஆம்புலன்ஸ் வாகனங்களை மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி னால் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப்பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீசாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறு காவல்  துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.