திருவள்ளூர், டிச 2- திருநின்றவூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மதகு வாயிலாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட திருநின்றவூர், பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் (10,11,12,13- ஆகிய நான்கு வார்டுகள்) ஆகியவை தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் அங்கீகாரம் பெற்ற மனைகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏறக்குறைய 20-ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள அனைத்து வீடு களையும் வெள்ளநீர் 5 அடி உயரத்திற்கு சூழ்ந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடியாததால் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்ததின் பேரில் ராமர் மதகு திறக்கப்பட்டது. தண்ணீரும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.பின்னர் தனிநபர்கள் சிலர் திடிரென மதகை மூடிவிட்டதால் மீண்டும் தண்ணீர் அப்படியே தேங்கி நிற்கிறது. மீண்டும் அதிகாரிகளிடம் முறையிடவே மோட்டார்களை வைத்து தண்ணீரை இறைத்தனர். இதன் பின்னரும் தண்ணீர் குறையவில்லை. இதனால் மோட்டார்களை நகராட்சி நிர்வாகம் விலக்கிக்கொண்டது. குழந்தைகள் குடியிந்த வீட்டில் பாம்பு, பூச்சிகள் வாழ்வதா ?
கடந்த 15 நாட்களுக்கு மேலாக மழைநீர் வீடுகளில் தேங்கியுள்ளதால் பாம்பும், பூச்சிகளும் வீடுகளில் குடியே றியுள்ளது. சாக்கடை நீரும், மழைநீரு டன் கலந்து பொது சுகாதாரம் பாதிக்கப் ்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தை தவிர்க்க வீடுகளை சூழ்ந்த மழைநீரை ராமர் மதகு வழியாக திறந்து விடவேண் ்டும். குறைந்தது 5 ராட்சத மோட்டார் ்களை வைத்து குடியிருப்புகளில் உள்ள மழைநீரை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.அறி வழகன், எஸ்.தேவேநதிரன்,
பூந்த மல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபர்ட்எ பிநேசர், மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் பௌர்ணமி, பச்சையம்மாள் உட்பட பலர் புதனன்று (டிச-1) திருநின்றவூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பொதுமக்களின் உடைமைகளை யும், உயிரையும் பாதுகாக்க போர்கால அடிப்படையில் மதகுகளை சீரமைத்து அதன் வழியாக வெள்ளநீரை வெளி யேற்ற வேண்டும், ராட்சச மோட்டார் ்களை வைத்து உடனடியாக வீடுகளுக் ்குள் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள னர். பொதுமக்கள் உயிரையும், உடைமையையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தவறினால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.