districts

img

மதச்சார்பின்மையை பாதுகாக்க உறுதி ஏற்பு

156ஆவது காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு “மதச்சார்பின்மையை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வடசென்னை மாவட்டம் சார்பில் நம்மாள்வார்பேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்திஷ் குமார்,  பொருளாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன், மாவட்ட நிர்வாகி செம்மல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.