districts

img

அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி!

ஒன்றிய பாஜக அரசு மூன்று குற்றவியல் சட்டங்கள், 4 தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், ஐஎன்டியுசி, டியுசிசி தொழிற்சங்கங்களை பழிவாங்க கூடாது என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.10) எழும்பூரில் சென்னை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேற்றி அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் தொமுச பொருளாளர் கி.நடராசன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்டு 13 சங்கங்களின் தலைவர்கள் பேசினர்.