76வது குடியரசு தினமான ஞாயிறன்று (ஜன.26) தரமணி பள்ளி வாசலில் அரசியலமைப்புச் சட்ட முகப்புரை உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் ஆண்டனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், நிர்வாகிகள் கே.வனஜகுமாரி, முகமது ரஃபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.