districts

img

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மறியல்

விழுப்புரம், செப்.1- சி ஏ ஜி அறிக்கை வெளிவந்திருக்கின்ற சூழலில் சுங்கச்சாவடி (டோல்கேட்) ஊழல் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. இதனை கண்டித்து வெள்ளியன்று விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி டோல்கேட் முன்பு  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டக்குழுக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.  விழுப்புரம் மாவட்ட செயலாளர்  சே.அறிவழகன் தலைமை தாங்கினார், மாநில துணை செயலாளர் செல்வராஜ்,  கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எம்.கேபழனி,  விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மு.சிவக்குமார்,கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.வினோத்குமார், கடலூர் மாவட்டத் தலைவர்  கே.சின்ன தம்பி,திருவண்ணாமலை மாவட்டச் செய லாளர் சி.எம்பிரகாஷ், மாவட்டத் தலை வர் சி.முருகன், விழுப்புரம் மாவட்ட பொரு ளாளர் கே.தேவநாதன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன், மாவட்ட துணைச் செயலாளர் டி.ஆர்.கிருஷ்ண ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு டோல்கேட் ஊழலை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு டோல்கேட் வாகன நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்தும், குண்டு கட்டாக தூக்கியும் கைது செய்தனர்.