districts

img

2019ஆம் ஆண்டு வட்டாட்சியரிடம் குடி மனை பட்டா கேட்டு மனு

விருத்தாச்சலம் வட்டம் முகுந்த நல்லூர் கிராம மக்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வட்டாட்சியரிடம் குடி மனை பட்டா கேட்டு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டச் செயலாளர் என்.எஸ.அசோகன் தலைமையில் சார் ஆட்சியரிடம் குடிமனை பட்டா கேட்டு திங்களன்று (ஜூலை 26) மனு அளித்தனர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் சிவஞானம், வட்டக் குழு உறுப்பினர்கள் கலைச்செல்வன், முகுந்த நல்லூர் கிளைச் செயலாளர் சேகர் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

;