districts

img

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 20-

    ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர  மத்திய அமைப்பு சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு சனிக்கிழமை (மே 20) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

   கேங்மேன் பணியாளர்களை  களஉதவி யாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும்,  ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரபடுத்த வேண்டும், அடையாளம் காணப்பட்ட பகுதி நேர பணி யாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,

   1.12.2019 முதல் 16.5.2023 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மண்டலக்குழு செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

   மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர்,  மாநில துணைப்பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், பவர் இஞ்சினியரிங் அசோசியேசன் பொதுச்செயலாளர் கே.அருள் செல்வம், மாநில செயலாளர் ஆர்.ரவிக்குமார், கண்ணன் நிர்வாகிகள் தசரதன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.