விழுப்புரம்,ஜன.23- இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி வட்டம், தென்னமாதேவி ஊராட்சியில் வீட்டு மனை இல்லாத 14 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க கோரி இந்த போராட்டம் நடை பெற்றது. இதையடுத்து, வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, திருவாமாத்தூர் ஊராட்சி யில் 14 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க விழுப்புரம் கோட்டாட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இந்த நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோலியனூர் ஒன்றிய தலைவர் எம்.மும்மூர்த்தி தலைமை தாங்கி னார். மாநில துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். மாவட்டத் தலைவர் பி.முருகன்,ஜி.மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், எம்.முத்துவேல், ஏ.மணிகண்டன், கே.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.