districts

img

சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு லால்புரம் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

சிதம்பரம், பிப் 4- சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போரா ட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர் சங்கம்,  மகளிர் சுய உதவி குழுவினர், இளை ஞர்கள் பொது மக்களுடன் இணைந்து பிப். 5 ஆம் தேதி சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, பிப்.4 அன்று சாராட்சியர் அலு வலகத்தில் சாராட்சியர் சந்திரகுமார், கடலூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் ஆகியோர் தலை மையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சிதம்பரம் வட்டாட்சி யர் (பொறுப்பு) பிரகாஷ்,  ஆனந்தன் (சிபிஎம்), எம்.எஸ் ஜாகிர் உசேன் (விவ சாயிகள் சங்கம்), தமிழ் முன் சாரி(சிபிஐ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில், 15 நாள் அவகாசம் கேட்டதை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைப்பது என்று முடிவு செய்தனர். சாதகமான முடிவு வரவில்லை என்றால் லால்புரம் பிரதான சாலையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்துள்ளனர்.