districts

img

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி முன்னேற்றம்; பேரணி-பொதுக்கூட்டங்களில் திரளும் மக்கள்

கொல்கத்தா, மே 4- மேற்கு வங்கத்தில் தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் இடது முன்னணி முன்னேறிச் செல்கிறது. ஏழு கட்ட தேர்தல்களில் முதல் இரண்டு கட்டங்களாக வடக்கு வங்காளத்தின் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து இடது முன்னணி நம்பிக்கையுடன் உள்ளது. எல்லா இடங்களிலும் வலுவான செயல்பாடு இருந்தது. இடது முன்னணியின் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்றன. அவற்றில் மக்கள் பங்கேற்பு அதிகரி்த்து வருகிறது. மீதம் உள்ள 36 தொகுதிகளுக்கு மே 7 முதல் ஜூன் 1 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் இம்முறையும் திரிணாமுல் தலைமையில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. 42 இடங்களில் 30 இடங்களில் இடது முன்னணி போட்டியிடுகிறது. சிபிஎம் 23, ஆர்எஸ்பி 3, சிபிஐ மற்றும் பார்வர்டு பிளாக் தலா 2 தொகுதிகள். காங்கிரசுடன் 12 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சிபிஎம் வேட்பாளர்களில் 15 பேர் புதியவர்கள். ஐந்து வேட்பாளர்கள் பெண்கள் மற்றும் 11 வேட்பாளர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள்.