districts

img

தமிழக அரசை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

87 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காத தமிழக அரசை கண்டித்து செவ்வாயன்று (ஜன.17) பல்லவன் இல்லம் முன்பு ஓய்வூதியர்கள் ‘கருப்பு பொங்கல்’ ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் சென்னை கிளைத் தலைவர் நீலமேகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் ஏ.முத்துக்குமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.