பண்ருட்டி, பிப். 4- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவாமூர் கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமாத்மா. இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் ஆடு வளர்க்கும் தொழில் செய்கின்றனர். இவர்க ளுக்கு சொந்தமாக 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. வியாழனன்று வழக்க மாக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, பின்பு இரவு 10 மணியளவில் பட்டியில் அடைத்தனர். இரவு 11 மணிய ளவில் பட்டியில் இருந்த ஆடுகள் கத்தி யதைக் கேட்டு இருவரும் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டிக்கு சென்று பார்த்தனர். அப்போது 30 ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றுள்ளது. இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் பண்ருட்டி வட்டாட்சியர் சிவகார்த்திகேயன் தலை மையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு செட்டிபாளையம் கால்நடை மருத்துவரை வரவழைத்து ஆடுகள் இறப்பு குறித்து கேட்டறிந்தனர்.