சென்னை, செப். 26 - பல்லாவரம் - அனகாபுத்தூர் சாலையை அகலப்படுத்தி பேருந்துகளை இயக்க கோரி வியாழனன்று (செப்.26) அனகாபுத்தூர் நூலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பல்லாவரம் - குன்றத்தூர் சாலை சுமார் 7 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இந்தச் சாலையில் எந்நேரமும் வாகன நெரிசலில் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக அனகாபுத்தூர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஓரிடத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது. இந்த சாலையை நான்கு வழிப்பாதை யாக மாற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி முழுமை அடையாததால் விரிவாக்கப் பணி நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில், பல்லாவரம் - குன்றத்தூர் இடையே இயக்கப்படும் பேருந்து கள், தற்போது பம்மலில் திரும்பி, மதுரவா யல் புறவழிச் சாலையின் அணுகுச் சாலை வழியாக குன்றத்தூருக்கு செல்கிறது. அனகாபுத்தூர் வழியாக பேருந்து செல்லாத தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள னர். நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்தில் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே, பல்லாவரம் - அனகாபுத்தூர் இடையே சாலையை விரைந்து அகலப் படுத்தி பேருந்துகளை இயக்க கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. கட்சியின் 2வது வார்டு கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், 30 ஆண்டுகளாக சாலையை விரிவாக்க மக்கள் கோரி வருகின்ற னர். சாலையை விரிவாக்கம் செய்ய ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கிய நிலை யில், நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர் என்றார். ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை தாம்பரம் மாநகராட்சி விரைவுபடுத்த வேண்டும்; பணி முடிந்த சாலைகளை செப்பனிட வேண்டும், சுகாதார மான குடிநீரை அனைத்து பகுதி மக்களுக் கும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கிளை உறுப்பினர் ஆர்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் சுந்தர், எம்.சந்திரன், ப.ரேவதி, கிளை செயலாளர்கள் வெங்கட், ஹேமகுமார், மோகன் உள்ளிட்டோர் பேசினர்.