செய்யூர், நவ.13- செங்கல்பட்டு மாவட்டம், கல்பட்டு கிராமத் தில் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ள குடி நீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் வட்டம், லத்தூர் ஒன்றியம் திரு வாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது கல்பட்டு கிராமம். இங்கு இருநூறு குடியிருப்புகளும் ஆயி ரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோரும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்களின் குடி நீர் தேவைக்காக இக்கிரா மத்தின் மையப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட குடி நீர் மேல்நிலைநீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி யானது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். பலவீன மான தொட்டி இடிந்து விழுந்தால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆகவே குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.