மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அண்ணா நகர் தெற்கு பகுதி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பகுதி செயலாளர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி செல்வா, அண்ணா நகர் பகுதிச் செயலாளர் மகேந்திர வர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.