கடலூர்,ஜூலை 27-
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறு வனம் கால்வாய் அமைக்கும் பணி 2 ஆவது நாளாக தொடர்வதால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து 1000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி நிறு வனம் (என்எல்சி) 2 வது சுரங்கம் விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத் தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கரி வெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி இருந்தது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலை யில், தற்போது கூடுதல் இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு வேலை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வளைய மாதேவி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன், சுமார் 10 ஏக்கர் நிலப் பரப்பில் பரவனாறு வடி கால் வாய்க்கால் வெட்டும் பணியை என்எல்சி நிறு வனம் துவக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. மறு புறத்தில், 17 வாகனங்கள் வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டது. சில இடங்க ளில் சாலையில் டயரையும் கொளுத்தி போட்டனர்.
இத்தகைய சூழ்நிலை யில், என்எல்சி நிர்வாகம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் தலைமையில், திரு வண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் 1000க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்துள்ளது. மேலும், இரண்டாவது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் தனது பணியை வேகப் படுத்தி உள்ளது.
விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நேரத்தில் அறுவடை வரை காத்திரா மல் சாகுபடி பயிர்களை சேதப்படுத்தி நடைபெற்று வரும் என்எல்சி நிறுவன பணியாளர் கடலூர் மாவட்ட மக்கள் மட்டும் அல்லா மல் பல்வேறு கட்சியினர் விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வரு கின்றனர்.