மதுராந்தகம்,டிச.20- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்( 58). டிராக்டர் டிரைவர். இவர் சென்னை செம்பியத்தில் இருந்து ஞாயிறு அன்று இரவு புதிதாக வாங்கப் பட்ட டிராக்டர் ஒன்றை ஓட்டிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டி ருந்தார். அச்சரப்பாக்கம் அருகே உள்ள அரப்பேடு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் அதிகாலை 1 மணியளவில் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது. அப்போது பின்னால் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டர் நொறுங்கி சாலையோரத் தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பஸ்சின் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டு முன் பக்க கண்ணாடி நொறுங்கி யது. இது குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பலியான ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.