districts

வார்டுக்கு ஒரு இ-சேவை மையம் : மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

சென்னை, மார்ச் 2 – சென்னை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் வியாழனன்று (மார்ச் 2) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்து இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் முறையில் 4 ஆண்டு களுக்கு பொது-தனியார் கூட்டாண்மை முறையில் புதுப்பித்தல் மற்றும் பராமரித் தல், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் சாலைகள் மேம்படுத் தப்படுத்துதல், புவிசார் தொழில்நுட்பம் மூலம் கட்டிடங்களை ட்ரோன் மூலமாக வும், வீடு வீடாக சென்று சீர் ஆய்வு செய்யப் பட்டதில் அளவீடு மற்றும் உபயோகத் தன்மையில் மாறுபாடு உள்ளது. இத்தகைய  கட்டிடங்களை அளவீடு செய்து வருவாய்  பெருக்க 5 கோடி ரூபாய் செலவில் தனியார் நிறுவனத்தை ஈடுபடுத்தப்படுத்துதல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இந்தக் கூட்டத்தில் பேசிய 197வது வார்டு உறுப்பினர் மேனா, தமது வார்டில் மூடப்பட்ட இ-சேவை மையத்தை மீண்டும் திறக்க கோரினார். அப்போது சில உறுப்பி னர்கள், இத்தகைய புகாரை தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்றத்திற்கு ஒரு இ-சேவை மையத்தை மாநில அரசு அமைப்பது போல்,  வார்டுக்கு ஒரு இ-சேவை மையம் அமைக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  அதற்கு பதிலளித்த ஆணையர் ககன்தீப்சிங் பேடி, இதுகுறித்து அரசின்  கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார். மாமன்ற உறுப்பினர் காசிநாதன் பேசிய தற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, சாலை யோரம் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த காவல்துறை அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.