மறைந்த செவாலியே சிவாஜி கணேசன் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பம் ஈ.சி.ஆர். சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ. சரவணன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.