சென்னை, ஜன. 23- மின்சார ரயில்களில் பயணிக்க கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகளில் 20 விழுக் ்காடு கூட்டம் அதிகரித்துள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மின்சார ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி இருக்க வேண்டும். சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி எண் இணைக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் வருபவர்கள் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தினமும் பல ஆயிரக் கணக்கான பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதனால், மின்சார ரயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. மற்றொருபுறம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, மின்சார ரெயில்களில் பயணிக்க பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மக்களும் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள் ்ளது. இதனால், மாநகர பேருந்துகளில் சராசரியாக 17.83 லட்சத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை, தற்போது 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர்.