3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த முதியவர் பலி
அம்பத்தூர், நவ. 15 - அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர் சிவகுமார் (74). இவரது மனைவி கோதை (70 ) இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகன் அமெரிக்காவில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் 13ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த முதியவர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் காவல் துறையினர் முதியவர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகள்
சென்னை, நவ. 15- டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை போக்குவரத்து துறை அறி முகம் செய்துள்ளது. தமிழ்நாடு போக்கு வரத்துத் துறையில் கடந்த ஜுன் மாதம் முதல் சூழ லுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி (CNG), எல்.என்.ஜி (LNG) மூலம் இயங்கும் பேருந்து கள் இயக்கப்பட்டு வரு கின்றன. அதன்படி, தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்து கள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்படு கின்றன. தற்போது மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகங் களில் தலா 2 வீதம் 6 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படு கின்றன. அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தின் சார்பாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பேருந்து களில் முதல் முறையாக, டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது. இந்த பேருந்து திருச்சி – சென்னை வழித்த டத்தில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து, கோவை, திரு நெல்வேலி, விழுப்புரம் போக்குவரத்து கழகங்க ளிலும் சோதனை அடிப்ப டையில் சிஎன்ஜி பேருந்து கள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன.