districts

img

முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம், டிச. 1- அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மயிலம் ஒன்றிய 10ஆவது மாநாடு கூட்டேரிப் பட்டில் வியாழனன்று (டிச. 1)  நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் எம்.மணி தலைமை தாங்கினார். ஒன்றியப் பொருளாளர் கார்த்தி கேயன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் வி.அர்ஜூனன் மாநாட்டை துவக்கி வைத்தார். ஒன்றியச் செய  லாளர் எஸ்.அபிமன்னன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.  மாவட்ட துணைத்தலைவர் ஜி. ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினர். 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக மாற்றி, தினக்கூலி 600 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், ஏழைப் பெண்களின் திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், டிசம்பர் 20ஆம் தேதி அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 17 பேர் ஒன்றியக்குழுவின் தலைவராக எஸ்.காளிதாஸ், செயலாளராக டி. ஜெயமூர்த்தி, பொருளாளராக எஸ்.அபிமன்னன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;