districts

img

பழங்குடி இருளருக்கு பட்டா கொடுத்தும் அளவீடு செய்யாத அதிகாரிகள்

கடலூர்,அக். 27- பழங்குடி இருளர் இன மக்களுக்கு பட்டா கொடுத்தும் இடத்தை அள வீடு செய்து கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து பழங்குடி இருளர் பாது காப்பு சங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில்  கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் 18 கிராமத்தில் 180 பழங்குடி இருளர் குடும்பத்தி னருக்கு மனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை அளந்து கொடுத்து ‘அ’பதிவேட்டில் கணக்கு திருத்தம் செய்ய வில்லை. இதனால், அளவீடு செய்து திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தை ஆதரித்து மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் குளோப், விசிக செயலாளர் செந்தில், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகி பால்கி ஆகியோர் பேசினர். ஆதிமூலம் தலைமை தாங்கினார். ஆறுமுகம், ஆல்பேட்டை பாபு, விஜயகுமார் ஆகி யோர் உரையாற்றினர்.