திருவண்ணாமலை,பிப்.6- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். பிப்.6 அன்று இம் மாதத்திற்கான விவ சாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட உதவி திட்ட அலு வலர் தமிழ்ச்செல்வன் தலை மையில் நடைபெற்றது. விவசாயிகள் குறை தீர் கூட்டத்திற்கு பல துறை களை சார்ந்த அரசு அதிகாரிகள் வர வில்லை. துறை சார்ந்த கேள்வி களுக்கு பதில் கிடைக்க வில்லை. இதனால், ஆவேச மடைந்த விவசாயிகள் வெளி நடப்பு செய்து திருவண்ணா மலை - பெங்களூரு நெடுஞ் சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட திட்ட உதவி அலுவலர் தமிழ்ச்செல்வன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அடுத்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று உறுதியளித்தார். இதன் பிறகு, விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.