districts

img

கொத்தடிமைகள் மறுவாழ்வுக்கான விடியல் திட்டத்தை முடக்கும் அதிகாரிகள்

திருவள்ளூர், ஜன.1- கொத்தடிமைகளுக்காக உருவாக்கப்  பட்ட செங்கற்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் சட்ட விரோதமாக நெற்களம் அமைத்து விடியல் திட்டத்தையே முடக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர். கொத்தடிமைகளாக இருந்து மீக்கப்பட்ட இருளர் இன குடும்பங்க ளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக  விடியல் என்று அழைக்கப்படும் திட்டத்திற்கு ரூ.7 கோடியே 34 லட்சம் ஒதுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமான 2023 பிப்ரவரி 9அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கும் ஊராட்சியில் செங்கல் உற்பத்தி குழு துவங்கப்பட்டது. இதில் அதிகத்தூர், பிஞ்சுவாக்கம், கூவும், திருப்பாச்சூர் ஆகிய ஊராட்சி களில் கொத்தடிமைகளாக இருந்த 28 பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு வேலை தரப்பட்டது. கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட வர்களுக்கு மறுவாழ்வு அளித்திட சுயதொழில் புரியும் திட்டத்தில், பிஞ்சு  வாக்கத்தில் செங்கல் சூளை அமைக்க சர்வே எண் 27/1 நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை சமப்படுத்த செய்தல்,  மண்மேடு அமைத்தல்,  ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் மற்றும் மின் கம்பம், மின் வசதி, கழிப்பறை, முல்வேலி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.99 லட்சம்  ஒதுக்கப்பட்டு செயல்பட்டுள்ளது. செங்கல் சூளை உற்பத்தியில் ஈடுபட்ட 28 பழங்குடி குடும்பங்களுக்கு கூலி வேலை மட்டுமே வழங்கப்படு கிறது. உரிமையாளராக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 45 ஆயிரம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதற்கான பணம் ரூ.90 ஆயிரம் வங்கியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உழைத்த மக்களுக்கு லாபத்தை பிரித்து கொடுக்கவில்லை. மறுவாழ்வுக்காக துவங்கப்பட்ட செங்கல் சூளையில் மீண்டும் கொத்தடிமைகளாக வேலை செய்யும் நிலை தொடர்வது வேதனையளிக்கிறது. சட்ட விரோத நெற்களம் இதற்கிடையில் செங்கல் தயாரிக்க  பிஞ்சுவாக்கம் ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட, அதே நிலத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில்  கீழ் 2024 மற்றும் 2025 ஆண்டு நிதியில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில்  நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல் உற்பத்திக்கான எந்த வேலை யும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். செங்கற்கள் அடுக்க பாது காப்பிற்காக கம்பி வேலி அமைக்கப் பட்ட இடத்திற்குள் நெற்களம் அமைத்தி ருப்பது அரசின் விடியல் திட்டத்தையே கேலிக் கூத்தாகும் செயலாகும். மீட்கப்பட்ட கொத்தடிமை  தொழி லாளர்களுக்காக பிஞ்சிவாக்கத்தில் செங்கல் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சட்ட விரோதமாக  அமைக்கப்பட்ட நெற்களத்தை அகற்ற வேண்டும். பழங்குடி மக்கள் மீண்டும் கொத்தடிமை தொழிலாளர்களாக மீண்டும் மாறுவதை தடுக்க வேண்டும். செங்கற்கள் உற்பத்தி செய்யும் இடத்தில், நெற்களம் அமைத்த அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடியல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நிலுவை ஊதியத்தை  வழங்க வேண்டும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு இது குறித்து தெரிவிக்கை யில், இருளர் இன மக்களை கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அவர்களை உரிமையாளர்களாக மாற்றுவது தான்   விடியல் திட்டத்தின் நோக்கமாகும். செங்கற்கள் உற்பத்தி செய்யும் நிலத்தையே அதிகாரிகள் ஆக்கிர மித்து நெற்களம் அமைத்துள்ளது கண்டனத்திற்குரியது. கொத்தடிமை களின் மறுவாழ்விற்காக அரசு கொண்டு வந்துள்ள விடியல் திட்டத்தையே அதிகாரிகள் முடக்கிவிட பார்க்கின்றனர். செங்கற்கள் உற்பத்தி செய்யும் தொழிலை கண்காணிக்க தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக 7 பேரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஒருவரும் நியமித்துள்ளனர். இவர்க ளுக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.