கடலூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞருக்க ஆதார் அட்டை இல்லாததைக் காரணம் காட்டி உதவிகளை மறுத்து, வயதான பெற்றோரை 15 வருடங்களாக அலையவிட்டு வரும் அதிகாரிகள். கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (75). வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் இளவேனில் (40) தீவிர மன வளர்ச்சி குன்றியவர். அவருக்கு 2009 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி அடையாள சான்று வாங்கியுள்ளனர். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. 2000 அவருக்கு வழங்க வேண்டும். இதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பித்து அறைந்திருக்கிறார்கள். ஆதார் அட்டை படம் பிடிப்பதற்கு, தீவிர மன வளர்ச்சி பாதிப்புடைய இளவேனில் ஒத்துழைக்க முடியவில்லை. இதனால் அவருக்கு இதுவரை ஆதார் அட்டை பெற முடியவில்லை. ஆனால், உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர் என வயதான தந்தை செல்வராஜ் கூறுகிறார். தற்போது, 2009 ஆம் ஆண்டு எடுத்த அட்டை செல்லாது. புதிய அடையாள சான்று வழங்க வேண்டும் எனவும் அதிகாரி கள் கூறுவதாகவும் அதற்கு ஆதார் அட்டை கொண்டு வந்தால்தான் புதிதாக மாற்றுத்திறனாளி சான்று வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறுவதாக செல்வ ராஜ் கூறுகிறார். தற்போது 40 வயதாகும் தனது மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு, அரசின் உதவித்தொகை பெற முடியவில்லை என்றும் 15 வருடங்களாக அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்தாகவும் தந்தை செல்வராஜ் வேதனையோடு தெரி விக்கிறார். நலத்திட்டங்கள் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்க கூடாது என உச்ச நீதி மன்ற தீர்ப்பு உள்ளது. ஆதார் பெற முடியாத மன வளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதாரை கட்டாயம் கேட்க கூடாது என மாற்றுத்திறனாளி துறையும் ஏற்கெனவே மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அறிகிறோம். எனினும், மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சிறிதளவும் கூட சிந்திக்கா மல், இப்படி முரட்டுத் தனம் காட்டுவதும் மாற்றுத்திறனாளிகளையும் அவரது பெற்றோரையும் அலைக்கழிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.உணவே ஆதாரை கட்டாயப்படுத்தும் விவ காரத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் என். நம்புராஜன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.