districts

img

விவசாயிகளை அலைக்கழிக்கும் அதிகாரிகள் குடியேறும் போராட்டம் அறிவிப்பு

ராணிப்பேட்டை,ஜூலை 31-

    கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று தலைமுறைகளாக வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கீழ்மின்னல் மதுரா கன்னிகாபுரம் பகுதியில் மூன்று தலைமுறைக்கு மேலாக வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு ராணிப்பேட்டை ஆட்சி யர் அலுவலகம் முன்பு திங்க ளன்று (ஜூலை 31) கன்னிகா புரம் கிளை தலைவர் எம். தனபால் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

   மாநில செயலாளர் பி. துளசி நாராயணன், மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். மாவட்டப் பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி. சந்திரன்,  நிர்வாகிகள் என்.ரமேஷ், ஆர்.மணிகண்டன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.