கடலூர், பிப்.6- கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் 100 நாள் வேலையில் பணித்தள பொறுப்பாளர்கள் வேலை செய்த நபர்களை 100 நாட்கள் வேலை முடியாமல், அவர்களை நீக்கிவிட்டு ஆளும் கட்சியை சேர்ந்த நபர்களுக்கு வேலை வழங்குவதை கண்டித்து, அதற்கு துணை போகும் கம்மாபுரம் பிடிஓ சங்கர் கண்டித்து, பணியில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்க வலியுறுத்தியும் கம்மாபுரம் பிடிஓ அலுவலகம் முன்பு சிபிஎம் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.இளங்கோவன், எஸ்.கனகராஜ், பி.வீரமணி ,ஜி.வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.