சென்னை, அக். 14 -எம்ஆர்பிதொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்ய வலி யுறுத்தி திங்களன்று(அக்.14) தமிழகம் முழுவ தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி, சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவிப்பு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி அனைத்து எம்ஆர்பி தொகுப் பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்து வமனைகளில் காலியாக உள்ள சுமார் 1500 செவிலியர் பணியிடங்கள் எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். கொரோனா காலத்தில் இரண்டு வரு டங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப் பட்டு காத்திருக்கும் 1700 செவிலியர்களுக் கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். நோயா ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணி யிடங்கள் உருவாக்கி பணி வழங்க வேண்டும். எம்ஆர்பி செவிலியர்களின் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் செ.அமுதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் து.அஸ்வினி கிரேஸ் ஜெயப்பிரியா, மாவட்டச் செயலாளர் பி.மீனாட்சி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர்ம.அந்தோணிசாமி உள்ளிட்டோர் பேசினர்.