மாமல்லபுரம்,அக்.29- கல்பாக்கம், கூடங்குளம் பகுதியில், அணுசக்தி துறைகளின் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இத்துறைகளில் அணுசக்தி தொழில் நுட்ப பணிகளுக்கான உயர்கல்வி பயிற்சி கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இயங்கும் பாபா அணு உலை ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது. இதில் பொறியியல், இயந்திரவியல், ரசாயன பொறியியல், விண்கலன் தொழில் நுட்பம், எரிபொருள் சுழற்சி, பூமியின் தட்பவெப்ப அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஒரு வருடம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப்பிரிவுகளில் 16 ஆண்டுகளில் இதுவரை 570 பேர் பயிற்சி பெற்று அணுசக்தி துறைகளில் பணி செய்து வருகின்றனர். 2016-ம் ஆண்டில் பயிற்சி பெற்றவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப் பட்டது.