கடலூர், நவ.11- கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் கடலூர் வில்வ நகரில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பாலு.பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன், கூட்டமைப்பின் ஆலோசகர் ஆறு முகம், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது பொது செயலாளர் எஸ்.கே.தேவநாதன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். தீர்மானங்கள் கடலூரில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் விஷ காய்ச்சலை உடனடியாக கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடிப்பதுடன் தினமும் சேரும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கடலூர் கொண்டங்கி ஏரி பாதுகாக்கப்பட்ட நீர்நிலைப் பகுதியாக அறிவித்து அதன் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் . விரிவடைந்த மாநகராட்சி மக்களின் தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு அதை நிறை வேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் ஊராட்சி மாநகராட்சி சாலைகளை உடனடியாக செப்பணிட வும் பாதாள சாக்கடை திட்டத்தை பாதுகாப்பான சுகாதார திட்டமாக மாற்ற வேண்டும். கெடிலம், பெண்ணையாறு ஆக்கிரமிப்பை அகற்றி கரைகளை உயர்த்தி வெள்ளம் வரும் போது வெள்ளத்தில் இருந்து குடியிருக்கும் மக்களை பாதுகாக்க ஏற்பாடு செய்வதுடன் கடலூரின் இந்த இரண்டு ஆறுகளின் நீர் கடத்தும் திறனை அதிகப்படுத்த வேண்டும். கெடிலம் ஆறு குறித்த வல்லுநர் குழுவின் அறிக்கையை மக்களுக்கு வெளியிட்டு உடனடியாக ஆற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.கடலூர் தீபன் நகர், கோண்டூர் தியாகி சங்கரய்யா நகருக்கு புதிதாக சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். மாநகராட்சியுடன் புதிதாக சேரும் ஊராட்சிகள் இணைவதற்கு முன் வரி , தண்ணீர், மினி பஸ் நிறுத்தம் ,100 நாள் வேலை நிறுத்தம், மனை வரன்முறை ஆகிய பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளதால் மாநக ராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்க ளிடம் நேரடியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். மக்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தி டிசம்பர் 30 அன்று மாநகராட்சி முன் குடியிருப்போரையும் பாதிக்கப்பட்ட மக்களையும் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.