செஞ்சி,அக்.5- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள்குறித்து ஊராட்சி மன்றத் தலை வர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. ஒன்றியக் குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு வரவேற்றார். இந்த கூட்டத்தில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது ,“கிராமங்களில் பொது மக்களுக்கு தேவை யான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துகொடுக்க வேண்டி யது ஊராட்சி மன்றத் தலை வர்களின் கடமை”என்றார். எனவே, பருவமழையை எதிர்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனை வரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி னார். நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு வரத்து குறித்தும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். குடி யிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும் பாரித்துக்கொள்ள வேண்டும். யாரேனும் மழையால் பாதிக்கப் பட்டால் உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக அரசு இருக்கும். எந்த உதவி தேவை என்றாலும் என்னை நேரில் அணுகி பெறலாம் என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஒன்றிய குழுக் துணை தலை வர் ஜெயபாலன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சங்கத் தலைவர் அணையேரி ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், கண்ணன், சவுந்தரபாண்டியன், கலா, கோவிந்தராஜூலு மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.