சென்னை, டிச. 29- பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அகில இந்திய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட் டத்திற்கு அழைப்பு விடுத் துள்ளன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங் களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட மசோதா 2021ஐ கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடை பெறவுள்ளது. இதனை தொழிற்சாலை கள் நிறைந்த வட சென்னை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆயத்த மாநாடு திருவொற்றியூரில் உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மன்றத்தின் பொதுச் செயலாளர் என்.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலா ளர் வி.குமார், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், ஏஐடிசியுசி மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, ஆர்.குசே லர் (உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மன்றம்), பேச்சி முத்து (தொமுச), சுப்பிர மணியம் (எச்எம்எஸ்), ஏ.எஸ். குமார் (எல்டியுசி), அந்திரி தாஸ் (மதிமுக), எழில் கரோ லினா (எம்ஆர்எப்), வைத் தியலிங்கம் (சிபிசிஎல்) உள்ளிட்ட பல தலைவர்கள் பேசினர். வடசென்னை பகுதிக் குட்பட்ட ஆலைத்தொழிலா ளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வணிகர் சங்க தலைவர்களையும், வணிகர்களையும், பொது மக்களையும் சந்தித்து ஆதரவு கோருவது, பிப்ர வரி 23, 24 ஆகிய தேதிக ளில் சாலை மறியலில் ஈடுபடு வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.